போதைப்பொருள் ஒழிப்பில் தனித்து செயற்படவில்லை

''போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் நான் தனித்து செயற்படவில்லை'' - ஜனாதிபதி

by Staff Writer 29-07-2019 | 4:42 PM
Colombo (News 1st) போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் தாம் தனித்து செயற்படவில்லை என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று (29) முற்பகல் இரத்தினபுரியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தில் நாட்டின் 90 வீதமான மக்கள் தம்முடன் கைக்கோர்த்துள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார். எதிர்கால சந்ததியினருக்காக, சிறந்ததொரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக, அனைத்துத் தீர்மானங்களையும் எடுத்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள், புத்திஜீவிகள் உள்ளிட்ட அனைவரும் நாட்டிற்காக பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.