புதுக்குடியிருப்பில் மணல் கடத்தல்: 15 பேர் கைது

புதுக்குடியிருப்பு பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 15 பேர் கைது

by Staff Writer 29-07-2019 | 2:58 PM
Colombo (News 1st) முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உடையார்கட்டு, மூங்கிலாறு மற்றும் ரெட்பானா ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த மணல் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன், மணல் கடத்திய 15 உழவு இயந்திரங்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு, மணல் அகழ்விற்குப் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சந்தேகநபர்களை முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.