நிந்தவூரில் இரட்டைக் குழந்தைகள் கொலை: தாயைக் கைது செய்ய நடவடிக்கை

by Staff Writer 29-07-2019 | 2:49 PM
Colombo (News 1st) அம்பாறை - நிந்தவூரில் 10 மாத இரட்டைக் குழந்தைகள் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் குழந்தைகளின் தாயைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 26 வயதான தாய் தற்போது சம்மாந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த தாய் ஏற்கனவே மனநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்ற ஒருவர் எனவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது நிந்தவூர் - 14 பகுதியில் இன்று (29) அதிகாலை இந்தக் கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் குளியலறையிலிருந்து இரு குழந்தைகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 10 மாதங்களான இரண்டு பெண் குழந்தைகளே இவ்வாறு தாயால் கொலை செய்யப்பட்டுள்ளனர். குழந்தைகளின் தந்தையால் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஏனைய செய்திகள்