ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம்

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம்

by Staff Writer 29-07-2019 | 3:00 PM
Colombo (News 1st) வேலையற்ற பட்டதாரிகளால் கொழும்பு - லோட்டஸ் சுற்றுவட்டத்திற்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தைக் கலைப்பதற்கு பொலிஸாரால் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. தங்களுக்குத் தொழில் வழங்குமாறு கோரி ஜனாதிபதி செயலகத்தை நோக்கி ஆர்ப்பாட்டகாரர்கள் செல்ல முயற்சித்தபோது பொலிஸாரால் தடை ஏற்படுத்தப்பட்டதாக, நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் கூறியுள்ளார். இதன்போதே நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்