மியன்மாரில் சுரங்க விபத்தில் 15 பேர் உயிரிழப்பு

மியன்மாரில் மாணிக்கக்கல் அகழும் சுரங்கத்தில் விபத்து: 15 பேர் உயிரிழப்பு

by Staff Writer 28-07-2019 | 4:45 PM
மியன்மாரில் மாணிக்கக்கல் அகழும் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர். மியன்மாரின் கச்சின் மாநிலத்தின் பாகன்ட் பகுதியில் உள்ள பச்சை மாணிக்கம் வெட்டி எடுக்கும் சுரங்கத்தில் இன்று அதிகாலை இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்போது, உறங்கிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது சுரங்கத்தின் மேற்பகுதி இடிந்து வீழ்ந்துள்ளது. தகவலறிந்த மீட்பு படையினர் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்குப் போராடிய இருவரை காயங்களுடன் மீட்டுள்ளனர். மேலும், உயிரிழந்த 15 பேரின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.