பருத்தித்துறையில் பெண்ணின் சடலம் மீட்பு 

பருத்தித்துறையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் மீது பிரேதப் பரிசோதனை

by Staff Writer 28-07-2019 | 3:46 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் , பருத்தித்துறை - தம்பசிட்டி கிராமத்திலுள்ள தோட்டக்கிணறு ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் மீதான பிரேதப் பரிசோதனை இன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரியால் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். பருத்தித்துறை - தம்பசிட்டி கிராமத்திலுள்ள தோட்டக்கிணறு ஒன்றிலிருந்து நேற்று (27) முற்பகல் அப்பெண் சடலமாக மீட்கப்பட்டார். ஜெ.கிருபாலனி என்ற 35 வயதான பெண்ணே கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். யாழ். பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் சிவில் பிரிவில் அப்பெண் கடமையாற்றியதாக பொலிஸார் கூறினர். சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

ஏனைய செய்திகள்