ரஞ்சித், ஹரிசனின் அமைச்சுப் பொறுப்புக்கள் மாற்றம்

ரஞ்சித் மத்தும பண்டார, ஹரிசனின் அமைச்சுப் பொறுப்புக்கள் மாற்றம்

by Staff Writer 26-07-2019 | 4:10 PM
Colombo (News 1st) ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் P.ஹரிசன் ஆகியோருக்கான அமைச்சுப் பொறுப்புக்கள் மாற்றப்பட்டுள்ளன. பொது நிர்வாகம், இடர் முகாமைத்துவம் மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சராக செயற்பட்ட ரஞ்சித் மத்தும பண்டாரவிடமிருந்து கிராமிய பொருளாதார அமைச்சு நீக்கப்பட்டுள்ளது. எனினும், கால்நடை வள அபிவிருத்தி அமைச்சுப் பதவி ரஞ்சித் மத்தும பண்டாரவிற்கு வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, விவசாயம், கால்நடை வள அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சராக செயற்பட்ட P.ஹரிசனிடமிருந்து கால்நடை வள அபிவிருத்தி அமைச்சுப் பதவி நீக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக கிராமிய பொருளாதார அமைச்சுப் பதவி ஹரிசனுக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அமைச்சு மாற்றங்களுக்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து அமைச்சர்கள் இருவரும் இன்று முற்பகல் பெற்றுக்கொண்டுள்ளனர்.