பாரிய நீர்த்தேக்கங்களில் நன்னீர் மீன் வளர்ப்பு 

பாரிய நீர்த்தேக்கங்களில் நன்னீர் மீன் வளர்ப்பை மேம்படுத்த நடவடிக்கை

by Staff Writer 26-07-2019 | 4:29 PM
Colombo (News 1st) பாரிய நீர்த்தேக்கங்களில் நன்னீர் மீன் வளர்ப்பை மேம்படுத்த கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 800 ஹெக்டேயருக்கும் அதிக பரப்பில் அமைந்துள்ள பாரிய நீர்த்தேக்கங்களில் முதற்கட்டமாக நன்னீர் மீன் வளர்ப்பை முன்னெடுக்க உத்தேசித்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்காக மீன் குஞ்சுகளை இடுதல், நீர்த்தேக்கங்களை அண்மித்த பகுதிகளில் வாழும் மீனவக் குடும்பங்களுக்கு மீன்பிடி வலைகள் உள்ளிட்ட உபகரணங்களை வழங்குதல் போன்ற நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.