பல்கலைக்கழகங்களுக்கான வெட்டுப்புள்ளி வௌியீடு

பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான வெட்டுப்புள்ளி வௌியீடு

by Staff Writer 26-07-2019 | 5:14 PM
Colombo (News 1st) 2018 - 2019 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான வெட்டுப்புள்ளி வௌியிடப்பட்டுள்ளது. www.selection.ugc.ac.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதனூடாக தாம் தெரிவாகியுள்ள பாடநெறி மற்றும் பல்கலைக்கழகம் ஆகியவற்றை அறிந்துகொள்ள முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இம்முறை 30,830 பேர் பல்கலைக்கழக கற்கைநெறிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில், இம்முறை 645 மாணவர்கள் மேலதிகமாக இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

ஏனைய செய்திகள்