ஒருதொகை கற்றாழைக் கன்றுகளுடன் இருவர் கைது

by Staff Writer 25-07-2019 | 11:34 AM
Colombo (News 1st) அனுமதிப்பத்திரமின்றி கடல் மார்க்கமாக கற்றாழைக் கன்றுகளைக் கொண்டுசென்ற இருவர்,​ மன்னார் - பேசாளை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். பேசாளை கடற்பகுதியில் கடற்படையினர் நேற்று (24) முன்னெடுத்த சுற்றிவளைப்பின்போதே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பயணித்த டிங்கிப் படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. 22 பொதிகளில் பொதியிடப்பட்ட 618 கிலோகிராம் கற்றாழைக் கன்றுகள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன. மன்னார் மற்றும் பேசாளைப் பகுதிகளைச் சேர்ந்த 32 மற்றும் 47 வயதான இருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர்கள், சிலாவத்துரை வன பாதுகாப்பு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.