by Staff Writer 24-07-2019 | 5:27 PM
Colombo (News 1st) அம்பாறை - சம்மாந்துறை பகுதியில் இரண்டு வீடுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் தொடர்பில் தகவல் வழங்கிய லொறி சாரதி ஒருவருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று 50 இலட்சம் ரூபா சன்மானம் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நபர் முக்கியமான இரண்டு தகவல்களை பொலிஸாருக்கு வழங்கியுள்ளார்.
அந்த தகவல்களுக்கமைய கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி சம்மாந்துறை செந்நெல் கிராமத்தில் வீடொன்றினுள் இருந்து பாரிய அளவிலான வெடிபொருட்கள் மீட்கப்பட்டதுடன், அதே தினத்தில் சம்மாந்துறை நிந்தவூர் பகுதியில் வீடொன்றினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த மேலும் சில வெடிபொருட்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டன.
இதற்கிணங்க, குறித்த சாரதிக்கு ஒரு தகவலுக்கு 25 இலட்சம் ரூபா என்பதன் அடிப்படையில் 50 இலட்சம் ரூபா சன்மானம் வழங்க பொலிஸ் மா அதிபர் தீர்மானித்தமைக்கு அமைய இன்று ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டது.