சட்டவிரோதமாக தங்கியிருந்த 11 சீன பிரஜைகள் கைது

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 11 சீன பிரஜைகள் கைது

by Staff Writer 24-07-2019 | 3:27 PM
Colombo (News 1st) சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 11 சீன பிரஜைகள் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு 2 பகுதியில் கட்டட நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் விசாரணைப் பிரிவின் உதவி கட்டுப்பாட்டாளர் எம்.பி.வி. காரியவசம் தெரிவித்துள்ளார். சுற்றுலா விசா மூலம் குறித்த 11 பேரும் நாட்டிற்கு வருகை தந்துள்ளதுடன், அவர்களின் விசா காலாவதியாகியுள்ளது. 40 முதல் 50 வயதிற்குட்பட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணை நிறைவு பெறும் வரை சந்தேகநபர்கள் மிரிஹான தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ஏனைய செய்திகள்