தேயிலையை சர்வதேச சந்தையில் பிரபல்யப்படுத்த திட்டம்

உள்நாட்டுத் தேயிலையை சர்வதேச சந்தையில் பிரபல்யப்படுத்த திட்டம்

by Staff Writer 24-07-2019 | 12:25 PM
Colombo (News 1st) உள்நாட்டுத் தேயிலையை சர்வதேச சந்தையில் பிரபல்யப்படுத்துவதற்காக வேலைத்திட்டமொன்றை அடுத்த மாதம் முன்னெடுக்கவுள்ளதாக, இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது. இந்த வேலைத்திட்டத்தின் முதற்கட்டம், ரஷ்யாவை கேந்திரமாகக் கொண்டு முன்னெடுக்கவுள்ளதாக சபையின் தலைவர் லுசில் விஜேவர்தன தெரிவித்துள்ளார். இதற்கடுத்ததாக யுக்ரேன், ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகளிலும் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை தேயிலை சபை மேலும் தெரிவித்துள்ளது.