பெரும்போக நெல்லைக் களஞ்சியப்படுத்த அரசு தீர்மானம்

பெரும்போக நெல்லைக் களஞ்சியப்படுத்த அரசாங்கம் தீர்மானம்

by Staff Writer 23-07-2019 | 1:32 PM
Colombo (News 1st) பெரும்போக நெல்லைப் பாதுகாப்பாகக் களஞ்சியப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நெல்லை விற்பனை செய்வதற்கு முதலில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்ட போதிலும் தற்போது, அவற்றை மொத்தக் கையிருப்பாக வைத்துக் கொள்வதற்குத் தீர்மானித்துள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் கஸ்தூரி அனுராதநாயக்க தெரிவித்துள்ளார். சம்பா மற்றும் நாட்டு நெல் இந்த மொத்தக் கையிருப்பில் அடங்கியுள்ளதுடன், 50 000 மெற்றிக் தொன் நெல் தற்போது களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் சந்தையில் அரிசி விலையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டால், நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் வகையில், இந்த நெல் சந்தைக்கு விநியோகிக்கப்படும் எனவும் நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.