மாணவர்களுக்கான பசும்பால் வேலைத்திட்டம் இன்று

பாடசாலை மாணவர்களுக்கான பசும்பால் வழங்கும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்

by Staff Writer 23-07-2019 | 9:00 AM
Colombo (News 1st) பாடசாலை மாணவர்களுக்கு பசும்பால் வழங்கும் வேலைத்திட்டம் இன்று (23) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளது. ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைவாக இந்த வேலைத்திட்டம் இரத்தினபுரி - கலவானையிலுள்ள பாடசாலையில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்தினூடாக தரம் ஒன்று முதல் தரம் 5 வரையிலான மாணவர்களுக்கு முதல் கட்டமாக, மாணவர் ஒருவருக்கு 150 மில்லிலீற்றர் பால் வழங்கப்படவுள்ளது. இதற்காக வருடமொன்றிற்கு 1,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்படவுள்ளது.