by Staff Writer 23-07-2019 | 8:20 AM
Colombo (News 1st) கடும் காற்றுடனான வானிலையால் தென் மாகாணத்தின் பல பகுதிகளில் தொடர்ந்தும் மின்விநியோகத் தடை ஏற்பட்டுள்ளதாக, மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
மின்தடை காரணமாக 14 000க்கும் மேற்பட்ட குடும்பங்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாடாளாவிய ரீதியில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டதாகவும் மின்சக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.