திங்கட்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

திங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 23-07-2019 | 5:53 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. பெருந்தோட்டங்களில் காணப்படும் அனைத்து வைத்தியசாலைகளையும் பொறுப்பேற்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 02. குருணாகல் வைத்தியர் சேகு ஷிஹாப்தீன் மொஹமட் ஷாபியினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் 6ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதற்கு உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. 03. கன்னியா வெந்நீரூற்று மற்றும் பிள்ளையார் கோயில் தொடர்பில் திருகோணமலை மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. 04. தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக மத்திய தபால் பரிமாற்றகத்தில் 6 இலட்சத்திற்கும் மேற்பட்ட கடிதங்கள் தேங்கியுள்ளதாக, தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. 05. அவசரகால நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. 06. ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக, பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 07. ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகினர். வௌிநாட்டுச் செய்தி 01. இந்தியாவின் சந்திரயான் – 2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. விளையாட்டுச் செய்தி 01. சுதந்திரக் கிண்ணத் தொடருக்கான ஒளிபரப்பு உரிமையை வழங்குவதில் நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக, தகவல்களின் மூலம் உறுதியாகியுள்ளது.