கரைச்சி: சுகாதாரத் தொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

கரைச்சி பிரதேச சபையின் தற்காலிக சுகாதாரத் தொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

by Staff Writer 23-07-2019 | 8:20 PM
Colombo (News 1st) கிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபையில் தற்காலிகமாக கடமையாற்றும் சுகாதாரத் தொழிலாளர்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்திருந்தனர். தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி சுகாதாரத் தொழிலாளர்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்திருந்ததுடன் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். சுகாதார ஊழியர்களுக்கான நியமனம் வழங்கும் போது குறைந்தபட்ச கல்வித் தகைமையை அடிப்படையாகக் கொண்டு நியமனம் வழங்குமாறும், நிரந்தர ஊழியர்களுக்கான பதவி உயர்வுகளை வழங்குமாறும் இவர்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். கரைச்சி பிரதேச சபைக்கு முன்பாகக் கூடாரம் அமைத்து சுகாதார சிற்றூழியர்கள் கவனயீர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர். இதேவேளை, சுகாதாரத் தொழிலாளர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக சந்தை உட்பட பல பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாமல் காணப்பட்டன.

ஏனைய செய்திகள்