சந்திரயான் - 2 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது

இந்தியாவின் சந்திரயான் - 2 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது

by Staff Writer 22-07-2019 | 4:45 PM
Colombo (News 1st) இந்தியாவின் சந்திரயான் - 2 விண்கலம் இன்று (22) வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து சந்திரயான்-2 விண்கலம், இன்று பிற்பகல் 2.43 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. அதற்கான நேரக்கணிப்பீடு நேற்று மாலை 6 மணி 43 நிமிடம் முதல் ஆரம்பமாகியது. கடந்த 15ஆம் திகதி விண்ணில் ஏவப்படவிருந்த சந்திரயான்-2 விண்கலம், இறுதி நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டது. இதனையடுத்து விண்கலத்தின் தொழில்நுட்ப கோளாறுகள் சீரமைக்கப்பட்டு, இன்று விண்ணில் ஏவப்பட்டது. நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கவுள்ள முதலாவது விண்கலம் இதுவாகும். 150 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் வடிவமைக்கப்பட்டுள்ள சந்திரயான்-2 விண்கலம், வெற்றிகரமாக நிலவின் தென் துருவப்பகுதியில் தரையிறங்கும் பட்சத்தில் விஞ்ஞான ரீதியாக அனுகூலம் கிடைக்கும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். இந்த விண்கலம் வெற்றியடைந்தால் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவைத் தொடர்ந்து நிலவில் கால்பதிக்கும் நான்காவது நாடாக இந்தியா கணிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏனைய செய்திகள்