by Staff Writer 22-07-2019 | 5:11 PM
Colombo (News 1st) அவசரகால நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதியின் செயலாளரால் கையொப்பமிடப்பட்டு வௌியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் உத்தரவிற்கு அமைய அவசரகால நிலையை நீடித்து அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நாட்டில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களை அடுத்து, பாதுகாப்புத் தரப்பினரால் முன்னெடுக்கப்படும் சுற்றிவளைப்புகளுக்குத் தேவையான ஒத்துழைப்புகளை வழங்கும் நோக்கில் ஜனாதிபதியால் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.