பாடசாலை மாணவர்களுக்கு பசும்பால் வழங்கும் திட்டம்

பாடசாலை மாணவர்களுக்கு பசும்பால் வழங்கும் திட்டம்

by Staff Writer 21-07-2019 | 9:21 AM
Colombo (News 1st) கிராம சக்தி வேலைத்திட்டத்தின் கீழ் மாணவர்களின் போஷாக்கு நிலையை மேம்படுத்துவதுடன் பாலுற்பத்தியை அதிகரிப்பதற்கான திட்டத்தின் கீழான நடவடிக்கைகள் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த வேலைத்திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கு ஒரு கோப்பை பசும்பால் வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த வாரம் கலவானையில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, அரசாங்கத் தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது. அன்றைய தினம் 1500 மாணவர்களுக்கு பசும்பால் வழங்கப்படுவதுடன் பாலுற்பத்தியில் தன்னிறைவைக் காண்பதற்கான திட்டமும் குறித்த பிரதேசத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது. 17 இலட்சம் மாணவர்களுக்கு படிப்படியாக இந்த வேலைத்திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.