சனிக்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 21-07-2019 | 6:22 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. கொழும்பு – ஐந்து லாம்பு சந்தியில் லொறி ஒன்று, 7 முச்சக்கரவண்டிகளுடன் மோதியதில் 7 பேர் காயமடைந்துள்ளனர். 02. இலங்கை நிர்வாக சேவையின் தரம் 3இல் நிலவும் வெற்றிடங்களை பூர்த்தி செய்யும் நோக்கில் போட்டிப்பரீட்சை நடத்தப்படவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. 03. கழிவுப்பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் இறக்குமதி செய்யப்பட்ட சம்பவத்தின் பின்புலத்திலுள்ள நபர்கள் மற்றும் நிறுவனம் தொடர்பில் தற்போது மேலும் பல விடயங்கள் வௌிக்கொணரப்பட்டுள்ளன. 04. காலி கடற்பகுதியில் விபத்திற்குள்ளான Sri Lanka Glory என்ற சரக்குக் கப்பலிலுள்ள எரிபொருளை இறக்குவதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 05. சீரற்ற வானிலையால் துண்டிக்கப்பட்டுள்ள மின்சார விநியோகத்தை வழமைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. வௌிநாட்டுச் செய்திகள் 01. இங்கிலாந்து எண்ணெய்க் கப்பலை 23 ஊழியர்களுடன் ஈரான் சிறைப் பிடித்துள்ளது. 02. டில்லியின் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஷீலா தீட்சித் காலமானார். விளையாட்டுச் செய்தி 01. மேற்கு ஆசிய பேஸ்போல் போட்டிகளில் தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இலங்கை சாம்பியனாகியுள்ளது.