120000 பாவனையாளர்களுக்கான மின்விநியோகம் துண்டிப்பு

120,000 பாவனையாளர்களுக்கான மின்சார விநியோகம் துண்டிப்பு: வழமைக்குக் கொண்டுவர நடவடிக்கை

by Staff Writer 20-07-2019 | 4:04 PM
Colombo (News 1st) சீரற்ற வானிலையால் துண்டிக்கப்பட்டுள்ள மின்சார விநியோகத்தை வழமைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மாத்தறை மற்றும் காலி மாவட்டங்களில் மாத்திரம் 1,20,000-இற்கும் அதிக பாவனையாளர்களுக்கான மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு கூறியுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் நிலவும் பலத்த காற்றுடன் கூடிய வானிலை காரணமாக மின்கம்பிகள் மீது மரங்கள் முறிந்து வீழந்துள்ளன. இதன் காரணமாகவே மின்சார துண்டிப்பு ஏற்பட்டுள்ளது.