ஆவா குழுவினர் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு

மானிப்பாயில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் ஆவா குழுவைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

by Bella Dalima 20-07-2019 | 10:27 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - மானிப்பாயில் உள்ள சோதனைச் சாவடியை தாக்க முற்பட்ட ஆவா குழுவினர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர குறிப்பிட்டார். கூரான ஆயுதங்களுடன் அவர்கள் தாக்குதலில் ஈடுபட முற்பட்டதால் பொலிஸார் அவர்களைத் தாக்கியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.