புதிய இறப்பர் செய்கைக்காக நிதி ஒதுக்கீடு

புதிய இறப்பர் செய்கைக்காக ஹெக்டேயர் ஒன்றுக்கு 3,50,000 ரூபா நிதி ஒதுக்கீடு

by Staff Writer 20-07-2019 | 4:53 PM
Colombo (News 1st) பழைய இறப்பர் செய்கைகளை அழித்து புதிய இறப்பர் செய்கையை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளதாக கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. செய்கையாளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பெற்றுக்கொடுப்பதனூடாக இறப்பர் உற்பத்தி துறையை மேம்படுத்தவுள்ளதாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது. புதிய இறப்பர் செய்கைக்காக ஹெக்டேயர் ஒன்றுக்கு 3,50,000 ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.