கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரித்து வீசக்கூடும்

by Bella Dalima 20-07-2019 | 6:28 PM
Colombo (News 1st) வடமேல், மேல், தென்மேல் மற்றும் தென் கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரித்து வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மன்னார் தொடக்கம் காலி ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 70 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும் திணைக்களம் கூறியுள்ளது. இதன் காரணமாக இந்த கடற்பிராந்தியங்களை நாளை (21) காலை வரை பயன்படுத்துவதை தவிர்க்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புத்தளம் தொடக்கம் கொழும்பு ஊடாக மாத்தறை வரையான கடற்பிராந்தியங்களில் 3.5 அடி உயரத்திற்கு கடலலை உயரக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.