ஐந்து லாம்பு சந்தியில் லொறி 7 முச்சக்கரவண்டிகளுடன் மோதி விபத்து: 7 பேர் காயம்

by Bella Dalima 20-07-2019 | 5:07 PM
Colombo (News 1st) கொழும்பு - ஐந்து லாம்பு சந்தியில் லொறி ஒன்று 7 முச்சக்கரவண்டிகளுடன் மோதியதில் 7 பேர் காயமடைந்துள்ளனர். இன்று முற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பொருட்களை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த லொறி வேகக் கட்டுப்பாட்டை இழந்து, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  முச்சக்கரவண்டிகள் மீது மோதியதால் விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியிலுள்ள மக்கள் லொறி பயணித்த வீதியில் தடைகளை ஏற்படுத்தி லொறியை நிறுத்தியுள்ளனர். விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி மற்றும் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளனர்.