மனித உரிமை மீறல்களின் தாயகம் சீனா

மிக மோசமான மனித உரிமை மீறல்களின் தாயகம் சீனா: மைக் பொம்பியோ குற்றச்சாட்டு

by Bella Dalima 19-07-2019 | 4:48 PM
சீனா மிக மோசமான மனித உரிமை மீறல்களின் தாயகம் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.
சீனா மிக மோசமான மனித உரிமை மீறல்களின் தாயகம், இது உண்மையில் இந்நூற்றாண்டின் கறை
என மைக் பொம்பியோ விமர்சித்துள்ளார். இனங்கள் மற்றும் மத சார்பான சிறுபான்மை மக்களுக்கு எதிராக சீனாவில் மிக மோசமான மனித உரிமை மீறல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், உலக சனத்தொகையில் 83 வீதமானவர்கள் மத சுதந்திரம் அச்சுறுத்தலுக்குள்ளான அல்லது மத சுதந்திரம் மறுக்கப்பட்ட நாடுகளில் வாழ்வதாகவும் மைக் பொம்பியோ சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்தான காலப்பகுதியில் சின்ஜியாங் பகுதியில் அமைந்துள்ள தடுப்பு முகாம்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான முஸ்லிம்களையும் சிறுபான்மையினரையும் சீனா தடுத்து வைத்துள்ளதாகவும் அவர் தகவல் வௌியிட்டுள்ளார். மத சுதந்திரம் தொடர்பில் நேற்று (18) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இந்நிகழ்வில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் கலந்துகொண்டிருந்தனர்.