பீகாரில் மின்னல் தாக்கி 8 சிறுவர்கள் பலி

பீகாரில் மின்னல் தாக்கி 8 சிறுவர்கள் பலி

by Bella Dalima 19-07-2019 | 7:54 PM
இந்தியாவின் பீகார் மாநிலத்தில் மின்னல் தாக்கி 8 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதுடன், 10 சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளனர். பீகாரில் பருவ மழை பெய்து வருகின்றது. இந்நிலையில், அம்மாநிலத்தின் நவாடா மாவட்ட எல்லைக்குட்பட்ட தன்பூர் முஷஹரி கிராமத்தில் மழை பெய்து கொண்டிருந்த போது, விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மீது மின்னல் தாக்கியுள்ளது. இதனால், 8 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 10 குழந்தைகள் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் படுகாயமடைந்த குழந்தைகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.