மரணதண்டனையைக் கைவிடுமாறு வலியுறுத்தல்

மரணதண்டனையைக் கைவிடுமாறு ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் வலியுறுத்தல்

by Staff Writer 18-07-2019 | 1:31 PM
Colombo (News 1st) இலங்கையில் மரணதண்டனையை அமுல்படுத்துவதைக் கைவிடுமாறு ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர், ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர்கள் மற்றும் அதன் உறுப்பு நாடுகளின் தூதுவர்கள் சிலரை சந்தித்தபோதே, இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் மரணதண்டனையை இரத்து செய்யுமாறும் இதன்போது வலியுறுத்தப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் சபை, பிரான்ஸ், ஜேர்மன், இத்தாலி, நெதர்லாந்து, ருமேனியா ஆகிய நாடுகளின் தூதரகங்கள் மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் ஆகியவற்றின் ஒருமித்த இணக்கப்பாட்டுடன் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.