நல்லூர் கோவில் வருடாந்த மகோற்சவம் நடைபெறும் 

நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவம் இம்முறையும் நடைபெறும் என அறிவிப்பு

by Staff Writer 18-07-2019 | 8:22 PM
Colombo (News 1st) வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த மகோற்சவம் இம்முறையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வருடாந்த மகோற்சவம் தொடர்பில் சமூக வலைத்தளங்களிலும் இணையத்தளங்களிலும் பரப்பப்படும் வதந்திகளை முற்றாக நிராகரிப்பதாக நல்லூர் ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது. முருகப்பெருமானின் சித்தத்தின் பிரகாரம், தேவையான தருணத்தில் உரிய தீர்மானங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் நல்லூர் ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே, பக்தர்களை குழப்பமடையச் செய்யும் வகையில் பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்