எல்மோ ரொட்ரிகோ புள்ளேக்கு க்ரீடா பிரபா விருது

சிரேஷ்ட ஊடகவியலாளர் எல்மோ ரொட்ரிகோ புள்ளேக்கு "க்ரீடா பிரபா" வாழ்நாள் சாதனையாளர் விருது

by Staff Writer 18-07-2019 | 8:59 PM
Colombo (News 1st) விளையாட்டுத்துறைக்கான ஜனாதிபதி விருது வழங்கல் விழாவில் சிரேஷ்ட ஊடகவியலாளரான எல்மோ ரொட்ரிகோ புள்ளே "க்ரீடா பிரபா" வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். விருது வழங்கல் விழா பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி தலைமையில் நேற்று (17) நடைபெற்றது. இந்த வைபவத்தில் சிரேஷ்ட ஊடகவியலாளரான எல்மோ ரொட்ரிகோ புள்ளேக்கு "க்ரீடா பிரபா" வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. விளையாட்டுத்துறைக்காக நீண்டகாலம் வாழ்நாளை அர்ப்பணித்து ஊடகவியலாளராகவும், வர்ணனையாளராகவும் அவர் வழங்கிய பங்களிப்பிற்காக அவருக்கு இந்த விருது பரிசளிக்கப்பட்டது. எல்மோ ரொட்ரிகோ புள்ளே கொட்டாஞ்சேனை புனித பெனடிக்ட் கல்லூரியின் பழைய மாணவராவார்.