கம்பஹாவின் பல பகுதிகளில் நாளை 18 மணிநேர நீர்வெட்டு

கம்பஹாவின் பல பகுதிகளில் நாளை 18 மணிநேர நீர்வெட்டு

by Staff Writer 18-07-2019 | 8:02 AM
Colombo (News 1st) கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நாளை (19) காலை 8 மணி முதல் 18 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அதனடிப்படையில், வத்தளை, களனி, பியகம, மஹர, தொம்பே, ஜா-எல மற்றும் கம்பஹா பிரதேச சபை பிரிவுகளிலும் பேலியகொட, வத்தளை, ஜா- எல, கட்டுநாயக்க, சீதுவ ஆகிய நகர சபை எல்லைப் பிரதேசங்களிலும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. மின்சார விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள திருத்தப் பணிகள் காரணமாகவே நாளை காலை முதல் 9 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.