by Staff Writer 18-07-2019 | 8:53 AM
Colombo (News 1st) யாழ்ப்பாணத்தில், 2 393 கிலாகிராம் பீடி சுற்றும் இலைகள் மற்றும் புகையிலையுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் - மண்டைதீவு சந்தியில் இடப்பட்டுள்ள வீதித் தடையில் லொறியொன்றை சோதனைக்குட்படுத்தியபோதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, 44 பொதிகளில் பொதியிடப்பட்டிருந்த 1 359 கிலோகிராம் பீடி சுற்றும் இலைகளும் 31 பொதிகளில் இடப்பட்டிருந்த 1 034 கிலோகிராம் புகையிலையும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கலேவல பகுதியைச் சேர்ந்தவர்களே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக, கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.