பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய ஒருவர் கைது

பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய சந்தேகநபர் ஒருவர் கைது

by Staff Writer 17-07-2019 | 11:45 AM
Colombo (News 1st) களுத்துறை - தொடங்கொட, போம்புவல பகுதியில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தித்தவெல்கொட பகுதியைச் சேர்ந்த 39 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை நீதிமன்றத்தில் இன்று (17) ஆஜர்ப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சூதாட்டம் இடம்பெற்ற இடம் ஒன்றை சுற்றிவளைத்த சந்தர்ப்பத்தில், அங்கிருந்தவர்கள் பொலிஸார் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதன்போது இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.