by Staff Writer 17-07-2019 | 4:32 PM
Colombo (News 1st) கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் எதிர்வரும் வௌ்ளிக்கிழமை (19) காலை 8 மணி முதல் 9 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
வத்தளை, களனி, பியகம, மஹர, தொம்பே, ஜா-எல மற்றும் கம்பஹா பிரதேச சபை பிரிவுகளிலும், பேலியகொட, வத்தளை, கட்டுநாயக்க, சீதுவ ஆகிய நகர சபை எல்லைப் பிரதேசங்களிலும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
மின்சார விநியோக கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள திருத்தப் பணிகள் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.