அநுராதபுர வாகன விபத்தில் சிறுவர்கள் உள்ளிட்ட 17 பேர் காயம்

by Staff Writer 17-07-2019 | 7:04 AM
Colombo (News 1st) அநுராதபுரம் - சாவஸ்திபுர ரத்மல் சந்தி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட 17 பேர் காயமடைந்துள்ளனர். லொறியொன்றை முந்திச் செல்ல முற்பட்ட வேன் ஒன்று, குறித்த லொறியுடனேயே மோதியுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் வேனில் பயணித்த 13 பெண்கள், சிறுவர்கள் இருவர் மற்றும் சாரதி ஆகியோர் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நதிலையில், விபத்தில் காயமடைந்த பெண்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கம்பஹா - கிரிந்திவல பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு விபத்தை எதிர்நோக்கியுளளனர். விபத்தில் லொறியின் சாரதியும் காயமடைந்துள்ளார்.