வடக்கு மார்க்க ரயில் சேவையில் தாமதம்

by Staff Writer 16-07-2019 | 10:28 AM
Colombo (News 1st) வடக்கு ரயில் மார்க்கத்தின் ஊடான ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இன்று (16) காலை 6.20 மணியளவில் அநுராதபுரம் அங்கன பகுதியில் ரயில் எஞ்சின் தடம்புரண்டதாக, ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. இதனால் வவுனியாவிலிருந்து கோட்டை வரை பயணிக்கும் ரயில் தாமதமடைந்துள்ளது. எஞ்சினை தண்டவாளத்தில் நிறுத்தும் வரை வடக்கு மார்க்கத்தினூடான ரயில் சேவை தாமதமடையும் என, ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.