ருஹுணு பல்கலைக்கழக பீடங்களை மீளத்திறக்க தீர்மானம்

ருஹுணு பல்கலைக்கழக பீடங்களை மீளத்திறக்க தீர்மானம்

by Staff Writer 16-07-2019 | 10:57 AM
Colombo (News 1st) தற்காலிகமாக மூடப்பட்டுள்ள ருஹூணு பல்கலைக்கழகத்தின் வெல்லமடம வளாகத்திலுள்ள பீடங்களை மீளத் திறப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் மற்றும் பீடாதிபதிகளுக்கு இடையில் நேற்று மாலை நடைபெற்ற கலந்துரையாடலை அடுத்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் அமைதியின்மையுடன் செயற்பட்டதோடு,  பல்கலைக்கழகத்தின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்துள்ளனர். இதனால், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பிற்காக வெல்லமடம வளாகத்தின் அனைத்துப் பீடங்களும் காலவரையறையின்றி மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.