மும்பையில் நான்கு மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்தது

மும்பையில் நான்கு மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் 10 பேர் பலி

by Bella Dalima 16-07-2019 | 8:49 PM
மும்பை - டோங்கிரி பகுதியில் நான்கு மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 9 பேர் காயமடைந்துள்ளதாகவும் The Indian Express செய்தி வௌியிட்டுள்ளது. கட்டட இடிபாடுகளுக்குள் 12-இற்கும் மேற்பட்டோர் சிக்குண்டுள்ளதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது. டோங்கிரி டாண்டல் தெருவில் உள்ள கேசர்பார் கட்டடம் இன்று காலை 11.40 மணியளவில் இடிந்துள்ளது. தீயணைப்புப் படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். தேசிய பேரிடர் மீட்புக்குழுவின் உதவியை தீயணைப்புப் படையினர் நாடியுள்ளனர்.