20 ஆம் திகதி வரை கடல் கொந்தளிப்பாகக் காணப்படும்

எதிர்வரும் 20 ஆம் திகதி வரை கடல் கொந்தளிப்பாகக் காணப்படும்: வளிமண்டலவியல் திணைக்களம்

by Staff Writer 16-07-2019 | 5:08 PM
​Colombo (News 1st) இன்று முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை புத்தளத்தில் இருந்து காலியூடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்பிராந்தியங்களில் கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த கடற்பிராந்தியங்களில் 2.5 முதல் 3.5 மீட்டர் வரையில் அலை மேலெழக்கூடும் எனவும் இடைக்கிடையே கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மீனவர்கள் மற்றும் கடற்றொழிலாளர்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.