இன்றிரவு சந்திரகிரகணம்: இலங்கையில் தென்படும்

இன்றிரவு சந்திரகிரகணம்: இலங்கையில் தென்படும்

by Staff Writer 16-07-2019 | 3:37 PM
Colombo (News 1st) இந்த வருடத்தின் இறுதி சந்திரகிரகணம் இன்று நள்ளிரவு நிகழவுள்ளது. பகுதியளவிலான இந்த சந்திரகிரகணத்தை காண்பதற்கான வாய்ப்பு இலங்கை மக்களுக்கு கிட்டவுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி பிரிவு தெரிவித்துள்ளது. நள்ளிரவு 12.13 க்கு சந்திரகிரகணம் ஆரம்பமாகவுள்ளதுடன், நாளை அதிகாலை 5.47 வரை இடம்பெறவுள்ளதாக விண்வெளி ஆராய்ச்சி பிரிவின் பணிப்பாளர், பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்தார். அவுஸ்திரேலியா, ஆபிரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியா கண்டத்தைச் சேர்ந்த பெரும்பாலான நாடுகளில் சந்திரகிரகணத்தை காண முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்த வருடத்திற்கான இறுதி சந்திரகிரகணம் என்பதுடன், 2021 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதியே இலங்கையர்களுக்கு அடுத்த சந்திரகிரகணம் தென்படும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி பிரிவு குறிப்பிட்டுள்ளது.