24 மணிநேரத்தில் 279 சாரதிகள் கைது

24 மணிநேரத்தில் 279 சாரதிகள் கைது

by Staff Writer 15-07-2019 | 7:31 PM
Colombo (News 1st) கடந்த 10 நாட்களில் மதுபோதையுடன் வாகனம் செலுத்திய 3 154 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுபோதையுடன் வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கைது செய்வதற்கான சுற்றிவளைப்புகள் கடந்த 5ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இன்று (15) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் மதுபோதையுடன் வாகனம் செலுத்திய 279 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.