by Staff Writer 15-07-2019 | 7:20 PM
Colombo (News 1st) நிலவிவரும் வறட்சியுடனான காலநிலையால் மட்டக்களப்பு மாவட்டத்தில் செங்கல் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சித்தாண்டி, சந்தனமடு மற்றும் சேரடி போன்ற பகுதிகளிலுள்ள சுமார் 210 செங்கல் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
சித்தாண்டி - சந்தனமடு ஆற்றுநீரை நம்பியே இவர்கள் செங்கல் உற்பத்தியை மேற்கொண்டு வந்தபோதிலும், வறட்சி காரணமாக ஆற்றுநீர் வற்றிப்போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.