வதுரவ ரயில் விபத்தில் தந்தை, மகள் உயிரிழப்பு

வதுரவ ரயில் குறுக்கு வீதியில் இடம்பெற்ற விபத்தில் தந்தையும் மகளும் உயிரிழப்பு

by Staff Writer 15-07-2019 | 2:35 PM
Colombo (News 1st) வெயாங்கொட - வதுரவ ரயில் குறுக்கு வீதியில் இடம்பெற்ற விபத்தில் தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளனர். இன்று (15) காலை 6.30 மணியளவில் இருவரும் பயணித்த மோட்டார்சைக்கிள், கல்கிஸ்ஸயிலிருந்து காங்கேசன்துறைக்கு பயணித்த கடுகதி ரயிலுடன் மோதுண்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் ரத்தொழுகம பகுதியைச் சேர்ந்த 45 வயதான தந்தையும் 11 வயதான மகளுமே உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். உறவினர்கள் வீட்டிற்கு பயணித்தபோதே இவர்களிருவரும் விபத்தை எதிர்நோக்கியுள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் வத்துப்பிட்டிவல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.