by Fazlullah Mubarak 14-07-2019 | 8:20 PM
கடுவளை - கொள்ளுப்பிட்டிக்கு இடையிலான 177 பஸ் மார்க்கத்தில் நாளை இரவு 8 மணி முதல் 10 மணி வரை வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நவகமுவ, கடுவளை, கொத்தலாவலையில் உள்ள சங்கபிட்டி ரஜமஹா விகாரையின் வருடாந்த பெரஹெராவுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு சாரதிகளுக்கு பொலிஸார் அறிவித்துள்ளனர்.