கடுவளை - கொள்ளுப்பிட்டி போக்குவரத்தில் மாற்றம்

177 பஸ் மார்க்கத்தில் போக்குவரத்து நாளை மட்டுப்படுத்தப்படும்

by Fazlullah Mubarak 14-07-2019 | 8:20 PM

கடுவளை - கொள்ளுப்பிட்டிக்கு இடையிலான 177 பஸ் மார்க்கத்தில் நாளை இரவு 8 மணி முதல் 10 மணி வரை வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நவகமுவ, கடுவளை, கொத்தலாவலையில் உள்ள சங்கபிட்டி ரஜமஹா விகாரையின் வருடாந்த பெரஹெராவுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த காலப்பகுதியில் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு சாரதிகளுக்கு பொலிஸார் அறிவித்துள்ளனர்.