கெப்பிட்டல் மகாராஜா நிறுவன தலைமையக வளாகத்தில் ஆடிவேல் சக்திவேல் விழா

by Bella Dalima 13-07-2019 | 3:39 PM
Colombo (News 1st) ஆடிவேல் சக்திவேல் விழா வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவன தலைமையக வளாகத்தில் தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகின்றது. இன்று காலை ஆரம்பித்த நிகழ்வுகள் இரவு வரை கொழும்பு - 2, பிரேப்ரூக் பிளேஸில் அமைந்துள்ள கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத் தலைமையக வளாகத்தில் நடைபெறவுள்ளன. வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவன தலைமையகத்தை இன்று காலை வந்தடைந்த வேலாயுதப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றன. ஆடிவேல் விழாவை அலங்கரிக்கும் விதமாக பல்வேறு பாரம்பரிய , கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. எதிர்வரும் 16 ஆம் திகதி கதிர்காமத் திருத்தலத்திற்கு வேலாயுதப் பெருமான் எழுந்தருளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.