ஜனாதிபதி விசாரணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு

அரச நிறுவன ஊழல் மோசடிகளை ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு

by Staff Writer 13-07-2019 | 3:52 PM
Colombo (News 1st) அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 16 ஆம் திகதியுடன் விசாரணைக்குழுவின் பதவிக்காலம் நிறைவடையவிருந்தது. அதற்கமைய, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி வரை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகளை ஆராய்வதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்ன விசாரணைக்குழுவின் தலைவராக செயற்படுகின்றார்.