வறட்சியினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு

வறட்சியினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,65,173 ஆக அதிகரிப்பு

by Staff Writer 12-07-2019 | 3:49 PM
Colombo (News 1st) வறட்சியினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,65,173 ஆக அதிகரித்துள்ளது. 17 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் இன்று வௌியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்தில் 1,93,573 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் 1,56,994 பேர் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாவைத்துவ நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு குடிநீரை விநியோகிப்பதற்காக விசேட வேலைத்திட்டமொன்று அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.