கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 படகுகள் கைப்பற்றல்

போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 படகுகள் கைப்பற்றல்

by Staff Writer 12-07-2019 | 3:32 PM
Colombo (News 1st) போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு படகுகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். எந்த நாட்டினதும் கொடியோ அல்லது பதிவுக்குறிப்போ இன்றி காலியை அண்மித்த கடற்பரப்பில் பயணித்துக்கொண்டிருந்த நிலையில் குறித்த இரு படகுகளும் கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது. குறித்த படகுகளில் நடத்தப்பட்ட சோதனையில் 60 கிலோகிராமிற்கும் அதிக நிறையுடைய போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளுக்காக குறித்த படகுகள் துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. காலியை அண்மித்த பகுதிகளில் நேற்று (11) போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நால்வருக்கும் கைப்பற்றப்பட்ட குறித்த படகுகளுக்கும் தொடர்பிருக்கலாம் என கடற்படையினர் சந்தேகிக்கின்றனர்.